Wednesday, October 12, 2011

மழைப்பாடல்

தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க
சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்
வெளியேற முடியா வளி
அறை முழுதும் நிரம்பி
சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்
மூடியிருந்த யன்னலின் கதவுகளைத் தட்டித் தட்டி
நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி 
# மறுபாதி இலக்கிய இதழ்-06, வைகாசி-ஆவணி 2011
# விடிவெள்ளி

5 comments:

பூங்குழலி said...

நீரின் ரேகைகளை வழிய விட்டது மழை ...அருமை ..ரிஷான்.

நலம்தானே ?

soorya said...

arumai

jiff0777 said...

அருமையிலும் அருமை..எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//நீரின் ரேகைகளை வழிய விட்டது மழை ...அருமை ..ரிஷான்.

நலம்தானே ?//

நலம் அன்புச் சகோதரி.
நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

M.Rishan Shareef said...

அன்பின் சூர்யா,

//arumai//

உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது..நன்றி நண்பரே :-)