Saturday, May 12, 2012

ஈரக் கனாக்கள்


ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்
நீர்ப்பாம்புகளசையும்
தூறல் மழையிரவில் நிலவு
ஒரு பாடலைத் தேடும்

வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்
மூங்கில்கள் இசையமைக்கும்
அப் பாடலின் வரிகளை
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்

ஆல விருட்சத்தின்
பரந்த கிளைக் கூடுகளுக்குள்
எந்தப் பட்சிகளின் உறக்கமோ

கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்

நீர்ப்பாம்புகள் வௌவால்கள்
இன்னபிறவற்றை
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்
தூறல் மழையாகிச் சிதறுகின்றன
ஆவியாகி
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்
வெளியெங்கும்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எங்கள் தேசம் இதழ் - மே 01 - 15, 2012
# மலைகள் இணைய இதழ் - 01
# திண்ணை

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை ரிஷான்.

ஜெயபாலன் said...

கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்

நல்லாய் எழுதிறாய் நண்பா. உன் கனவுகள் வளரட்டுக்கும்
வ.ஐ.ச.ஜெயபாலன்

Kalaimahan said...

//கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்// ஆகா, அற்புத வரிகள். வாழ்த்துக்கள் ரிசான்!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அருமை ரிஷான்.//

வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிகவும் நன்றி அன்புச் சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஜாவித் ரயீஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வ.ஐ.ச.ஜெயபாலன்,

//நல்லாய் எழுதிறாய் நண்பா. உன் கனவுகள் வளரட்டும்//

உங்கள் வருகையும் கருத்தும் வாழ்த்தும் பெரும் ஊக்கத்தைத் தருகிறது.

மிகவும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கலைமகன் பைரூஸ்,

//ஆகா, அற்புத வரிகள். வாழ்த்துக்கள் ரிசான்!//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !