Saturday, June 1, 2013

கொக்குகள் பூக்கும் மரம்


தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
காலையில் பறக்கும் கிளைகளை
தலையில் கொண்ட பெரு விருட்சம்

ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்

வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்

இரை தேடி விடிகாலையில்
தமதிரு நெடிய கிளைகளையும்
வயிற்றில் பதித்துப் பறப்பவை
விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்

அவற்றைச் சேமிக்கும் மரம்
காற்றைத் தொட்டு
இறகுத் தூரிகையால்
ஓடும் ஆற்றில் கவியெழுதும்

- எம்.ரிஷான் ஷெரீப் 
நன்றி
# கலைமுகம்உயிர்மைநவீன விருட்சம்திண்ணைதமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம்பதிவுகள்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...


/// அவற்றைச் சேமிக்கும் மரம்...
காற்றைத் தொட்டு...
இறகுத் தூரிகையால்...
ஓடும் ஆற்றில் கவியெழுதும்... ///

மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

படமும் அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. அழகிய வரிகள்...
அருமையான கவிதை....

ரசித்தேன் வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

//மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

படமும் அழகு...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சௌந்தர்,

//ம்.. அழகிய வரிகள்...
அருமையான கவிதை....

ரசித்தேன் வாழ்த்துக்கள்//

உங்கள் முதல் வருகை மகிழ்வைத் தருகிறது. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !