Wednesday, September 10, 2008

ஒரு தற்கொலைக் குறிப்பு !

துரோகத்தைப் போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !

நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !

வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !

மறு நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !

செத்துப்போகிறேன் ;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !

இனிமேலும்,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

17 comments:

Anonymous said...

Nice poem!

But I don't agree with the fact that Suicide is being romanticised in this piece of work.

Suicide is not sexy, it's absolutely stupid!

If you were dumped by your lover, find a new1, there are plenty of women/men in this world to choose!

MSK / Saravana said...

//இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !//

//இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !//

ரொம்ப நல்லா இருக்கு கவிதை..

Anonymous said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: ஒரு தற்கொலைக் குறிப்பு !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th September 2008 03:49:18 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/4445

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

அருமையான வரிகள்
தொடருங்கள்

கோகுலன் said...

கவிதையாய் நன்றாய் இருக்கிறது.. கருத்து மனதை வலிக்கச்செய்கிறது..

chandru / RVC said...

தீராத வன்மங்களை விட்டுச்செல்வதில் துரோகத்திற்கு நிகர் துரோகம்தான். ஞாபகங்களைக் கிளறிய கவிதை ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் அனானி,

கவிதையைக் கவிதையாக மட்டும் பார்க்கவும். இது என் வாழ்க்கைக் குறிப்பல்ல. :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சுபாஷ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் rvc,
//தீராத வன்மங்களை விட்டுச்செல்வதில் துரோகத்திற்கு நிகர் துரோகம்தான். //

தீராத வன்மங்கள் மட்டுமல்ல.
காலமாற்றா மாறாத் தழும்புகளையும் தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

VIKNESHWARAN ADAKKALAM said...

http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html

ஒரு எட்டு பார்த்திடுங்க…

M.Rishan Shareef said...

அன்பின் விக்னேஷ்வரன்,

//http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html

ஒரு எட்டு பார்த்திடுங்க…//

பார்த்தேன்.மகிழ்ந்தேன்.
எனது கவிதைகளின் இணைப்பையும் அங்கே சேர்த்தமைக்கு நன்றி நண்பரே :)

Unknown said...

ரிஷான் ஷெரீப் உங்கள் தளத்துக்கு அடிக்கடி வந்துள்ளேன், ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை, காத்திரமான கவிதைகளைப் பிரசவிப்பதால் என்னுடைய http://www.kalamm2.blogspot.com/ எனும் "இலக்கியமேட்டில்" உங்களது வலைப்பூவின் சுட்டியையும் இணைத்துள்ளேன்.

பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் ஈழவன்,

அழகான பெயர் உங்களுடையது.
உங்கள் வருகையும், சுமந்து வந்த செய்தியும் மகிழ்வினைத் தருகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

தியாகு said...

"நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !"

ஏமாற்றம் என்பது எல்லாரும் வாழ்வில் எதிர்கொள்கின்ற ஒன்று . ஆனால் இங்கு எமாற்றமே ஒரு அழ்கிய கவிதை கவிதையாக

M.Rishan Shareef said...

அன்பின் தியாகு,

//ஏமாற்றம் என்பது எல்லாரும் வாழ்வில் எதிர்கொள்கின்ற ஒன்று . ஆனால் இங்கு எமாற்றமே ஒரு அழகிய கவிதை கவிதையாக //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)