Thursday, January 1, 2009

உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை

காதல் வானத்திலேறி
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு நீ
சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்

சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது

உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை

என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை

அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

13 comments:

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க...

Anonymous said...

:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை//



mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்

((அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது))
இந்த வரிகளின் பொருளைப் பின் தொடர்ந்து இக் கவிதையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது கொஞ்சம் வலிக்கவே செய்கிறது.

M.Rishan Shareef said...

அன்பின் பழமைபேசி,

//நல்லா இருக்குங்க...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கவின்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சுரேஷ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//((அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது))
இந்த வரிகளின் பொருளைப் பின் தொடர்ந்து இக் கவிதையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது கொஞ்சம் வலிக்கவே செய்கிறது.//

அனேகமான காற்று சுவாசத்தோடு வலிகளையும் அவதூறுகளையும் கூடவே சுமந்துவருகின்றனவே.. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Kavinaya said...

//என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை//

சமயங்களில் காலம் வண்ணங்களை அழித்து விட வாய்ப்பிருக்கிறது...

Kavinaya said...

//என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை//

சமயங்களில் காலம் வண்ணங்களை அழித்து விட வாய்ப்பிருக்கிறது...

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

////என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை//

//சமயங்களில் காலம் வண்ணங்களை அழித்து விட வாய்ப்பிருக்கிறது...//

ஆமாம். காலத்தின் கரங்களிலுள்ள அழித்துவிடுவதும் அழியாக் கறையாக ஆக்கிவிடுவதுவும். :(
அழித்துவிடுமென நம்புவோம் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

MSK / Saravana said...

//அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ//

அட்டகாசம் ரிஷான்.. மிக அழகா எழுதி இருக்கீங்க..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//அட்டகாசம் ரிஷான்.. மிக அழகா எழுதி இருக்கீங்க..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)