Tuesday, May 19, 2009
மீள்தலின் பாடல்
ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல்
தொய்வுகளேதுமின்றி
எழுதிவந்த விரல்கள்
வெளியெங்கும் புன்னகையை விதைக்கும்
இதழ்களோடும் விழிகளோடும்
சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன
இரவு பகல் காலநிலையென
மாறும் காலக்கணக்குகளறியாது
ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன்
ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு
மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது
கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி
ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி
எனது புலம்பல்களைச் சகித்தபடி
நடமாடிய செவிலித்தாய்களில்
அக்கா உன்னைக் கண்டேன்
ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை
உன்னழுகையில் குரல் இடராது
தொலைபேசி வழியே கசியவிட்டாய்
நகர்ந்த நொடிகளனைத்திலுமுன்
பிரார்த்தனைகளினதும்
நீ அதிர்ந்தெழும் கொடிய கனவுகளினதும்
மையப்பொருளாக
நானிருந்தேனெனப் பின்னரறிந்தேன்
நீ பார்த்துப்பார்த்துச் செதுக்கிய
கவிதையின் முகத்தினை
மீளப்பொருத்தியபடி
தம்பி வந்திருக்கிறேன்
எல்லாக்காயங்களையும்
முழுதாயாற்றிடக் காலத்துக்கும்
சிறிது காலமெடுக்கலாம்
எனினும்
'மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்' என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்
- எம்.ரிஷான் ஷெரீப்.
* அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானுக்கு...
Friday, April 17, 2009
சாகசக்காரியின் வெளி
அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை ஒலிபரப்பாளர் ஸைஃபா பேகம் அவர்களின் குரலில் கேட்க...
நன்றி -
* நவீன விருட்சம் காலாண்டிதழ்
* லண்டன் தமிழ் வானொலி
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை ஒலிபரப்பாளர் ஸைஃபா பேகம் அவர்களின் குரலில் கேட்க...
நன்றி -
* நவீன விருட்சம் காலாண்டிதழ்
* லண்டன் தமிழ் வானொலி
Labels:
கவிதை,
சமூகம்,
சிறப்பு,
நவீன விருட்சம்,
நிகழ்வுகள்
Thursday, April 9, 2009
கண்ணீர்ப் பிரவாகம்
2009, பெப்ரவரி மாத வடக்குவாசல் மாத இதழில் பிரசுரிக்கப்பட்ட எனது 'கண்ணீர்ப் பிரவாகம்' கவிதையினை தமிழ்மணம் நட்சத்திரப் பதிவாக இங்கே பார்க்கலாம்.
Labels:
கவிதை,
சமூகம்,
திண்ணை,
நிகழ்வுகள்,
வடக்கு வாசல்
Wednesday, April 1, 2009
துரோகிக்கு மிகவும் நன்றி
வஞ்சித்த சினேகமொன்றினை
எண்ணித்தனித்துச் சோர்ந்து
கதறிக் கதறியழுதவேளை
நீயுள் நுழைந்தாய்
மிகுந்து வெடித்த
கவலைக்கான கலங்கலிலுன்னுருவம்
தட்டுப்படவில்லையெனினும்
தலைசாயத் தோள் கொடுத்து
மிதந்த துயரையெல்லாம்
மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி
ஆதரவாய்ச் சொன்னாய்
கவலையறியாக் கண்ணீரறியா
தனித்த ஜீவனொன்று
காலம் காலமாய்ச் சேமித்த விழிநீரெல்லாம்
அணை உடைப்பெடுத்துத் திமிறிப் பொங்கி
உன் தோள் நனைத்த கணத்தில்
அன்னையின் அணைப்பையொத்த
அன்பான தலைதடவலுன்
கருணை மனம் சொல்லிற்று
எதற்கிந்த அழுகை
ஏதுன்னைக் கதறச் செய்தது
எதையுமே நீ கேட்டிடவில்லை
தூய அன்பைக் கொன்றவனதை
மயானத்தில் புதைத்த கதையின்
ஒரு சொல் பற்றிக் கூட
உன்னிடம் கேள்விகள் இருக்கவில்லை
அத்துயர்பற்றியேதும் நீ அறிந்திருக்கவுமில்லை
நீ யாரெனத் தெரிந்திருக்கவில்லையெனினும்
அக்கணத்தில் நீயொரு
ஊமையாய் இருந்தாய்
செவிடனாய் இருந்தாய்
எதையுமே அறியாமல்
பாசமாய் அரவணைத்தவொரு
பொம்மையாய் இருந்தாய்
வழிந்த துளிகள் காய்ந்து
கண்ணீர் மீதமற்ற பொழுதில்
புன்னகை தந்தவொரு தேவதூதனாயிருந்தாய்
வாழ்வின் பாதங்கள்
வழிதவறிப் போனதை மட்டும்
எக்கணத்திலும் கேட்டாயில்லை
வழிய வழிய அன்பைத்தந்து இப்பொழுதெல்லாம்
நயவஞ்சகனொருவன் பற்றிய
பழங்கால எண்ணங்கள் மிகைக்காமல்
நேசத்தின் அழகிய பாடல்களை
காலங்கள் தோறும் காற்றில் மிதக்கும்படி
எப்படிப் பாடுவதெனச் சொல்லித் தருகிறாய்
சகா
இரு கரங்கள் உயர்த்திய
புராதனப் பிரார்த்தனையொன்றின் பலனாக
அமைதியையும் அன்பையும்
அகிலம் முழுதுமான மகிழ்வையும் நிம்மதியையும்
அள்ளியெடுத்து நீ வந்தாயோ
வசந்தங்கள் நிறைந்து
நறுமண வாடை சுமந்த தென்றலுலவும்
ஓரழகிய பூஞ்சோலை வாழ்வின்
பளிங்குப் பாதை வழியே
எந்த இடர்களும் இடறல்களுமற்று
சிறுமழலையாய் விரல் பிடித்து
வழிகூட்டிப் போகிறாய்
இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி
கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
நன்றி - 'நாம்' மலேசிய காலாண்டிதழ் ஜனவரி - மார்ச் 2009
எண்ணித்தனித்துச் சோர்ந்து
கதறிக் கதறியழுதவேளை
நீயுள் நுழைந்தாய்
மிகுந்து வெடித்த
கவலைக்கான கலங்கலிலுன்னுருவம்
தட்டுப்படவில்லையெனினும்
தலைசாயத் தோள் கொடுத்து
மிதந்த துயரையெல்லாம்
மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி
ஆதரவாய்ச் சொன்னாய்
கவலையறியாக் கண்ணீரறியா
தனித்த ஜீவனொன்று
காலம் காலமாய்ச் சேமித்த விழிநீரெல்லாம்
அணை உடைப்பெடுத்துத் திமிறிப் பொங்கி
உன் தோள் நனைத்த கணத்தில்
அன்னையின் அணைப்பையொத்த
அன்பான தலைதடவலுன்
கருணை மனம் சொல்லிற்று
எதற்கிந்த அழுகை
ஏதுன்னைக் கதறச் செய்தது
எதையுமே நீ கேட்டிடவில்லை
தூய அன்பைக் கொன்றவனதை
மயானத்தில் புதைத்த கதையின்
ஒரு சொல் பற்றிக் கூட
உன்னிடம் கேள்விகள் இருக்கவில்லை
அத்துயர்பற்றியேதும் நீ அறிந்திருக்கவுமில்லை
நீ யாரெனத் தெரிந்திருக்கவில்லையெனினும்
அக்கணத்தில் நீயொரு
ஊமையாய் இருந்தாய்
செவிடனாய் இருந்தாய்
எதையுமே அறியாமல்
பாசமாய் அரவணைத்தவொரு
பொம்மையாய் இருந்தாய்
வழிந்த துளிகள் காய்ந்து
கண்ணீர் மீதமற்ற பொழுதில்
புன்னகை தந்தவொரு தேவதூதனாயிருந்தாய்
வாழ்வின் பாதங்கள்
வழிதவறிப் போனதை மட்டும்
எக்கணத்திலும் கேட்டாயில்லை
வழிய வழிய அன்பைத்தந்து இப்பொழுதெல்லாம்
நயவஞ்சகனொருவன் பற்றிய
பழங்கால எண்ணங்கள் மிகைக்காமல்
நேசத்தின் அழகிய பாடல்களை
காலங்கள் தோறும் காற்றில் மிதக்கும்படி
எப்படிப் பாடுவதெனச் சொல்லித் தருகிறாய்
சகா
இரு கரங்கள் உயர்த்திய
புராதனப் பிரார்த்தனையொன்றின் பலனாக
அமைதியையும் அன்பையும்
அகிலம் முழுதுமான மகிழ்வையும் நிம்மதியையும்
அள்ளியெடுத்து நீ வந்தாயோ
வசந்தங்கள் நிறைந்து
நறுமண வாடை சுமந்த தென்றலுலவும்
ஓரழகிய பூஞ்சோலை வாழ்வின்
பளிங்குப் பாதை வழியே
எந்த இடர்களும் இடறல்களுமற்று
சிறுமழலையாய் விரல் பிடித்து
வழிகூட்டிப் போகிறாய்
இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி
கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
நன்றி - 'நாம்' மலேசிய காலாண்டிதழ் ஜனவரி - மார்ச் 2009
Sunday, March 22, 2009
பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.
அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்
அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது
முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்
காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல
அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்
அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது
அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்
நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்
அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்
உன்னுடையது போன்றதேதானே
அவளுடையதும்
எனினும்
கழுத்தைச் சங்கென்கிறாய்
பற்களை முத்தென்கிறாய்
கன்னங்களைக் கனிகளென்கிறாய்
உதிர்ந்த ஒற்றை முடியை
உயிர்த்தோகை என்கிறாய்
உன் முன்னால்
வெட்டி எறிந்த நகத்துணுக்கைக் கூடப்
பிறைநிலவென வர்ணிக்கிறாய்
இன்னுமின்னும்...
அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?
நன்றி - மனிதம் இதழ்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
பெண் மனது
அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்
அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது
முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்
காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல
அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்
அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது
அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்
நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்
ஆட்சிகள் உனதாக
அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்
உன்னுடையது போன்றதேதானே
அவளுடையதும்
எனினும்
கழுத்தைச் சங்கென்கிறாய்
பற்களை முத்தென்கிறாய்
கன்னங்களைக் கனிகளென்கிறாய்
உதிர்ந்த ஒற்றை முடியை
உயிர்த்தோகை என்கிறாய்
உன் முன்னால்
வெட்டி எறிந்த நகத்துணுக்கைக் கூடப்
பிறைநிலவென வர்ணிக்கிறாய்
இன்னுமின்னும்...
அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?
நன்றி - மனிதம் இதழ்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, March 2, 2009
எம் மண்
நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன
வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி
ஏக்கங்கள்
தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று
சொந்தத் தரை மண்ணிட்டுப்
போற்றி வளர்க்கும் செடியொன்றின்
கிளைப் பூக்களுக்கு அவாவி
எல்லா இடர்களுக்குள்ளும்
எம் சுவடுகள் திரிகின்றன
நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை
' வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்க
தேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது '
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து
தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )
Labels:
கவிதை,
சமூகம்,
திண்ணை,
நிகழ்வுகள்,
யுகமாயினி
Sunday, February 15, 2009
கோபங்களின் நிமித்தம்
வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது
நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி
நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி
இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
நன்றி - வார்ப்பு, நவீன விருட்சம்
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது
நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி
நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி
இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
நன்றி - வார்ப்பு, நவீன விருட்சம்
Labels:
கவிதை,
சமூகம்,
நவீன விருட்சம்,
நிகழ்வுகள்,
வார்ப்பு
Thursday, February 5, 2009
உதிர்ந்த பூவின் வெயில்
கொழுத்த வெயில் பரவிய தார்வீதியின்
மேலுதிர்ந்த ஒற்றைப் பூவினை
ஏழை யாசகனொருவனின் மெலிந்த பாதமொன்று
மிதித்து நகர்கிறது
மிதிபடாவிடினும்
தாரோடு சேர்ந்து இதழ்கள் கறுக்க
இன்னும் பொசுங்கியிருக்கக்கூடும்
உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
பூவின் வலி
விருட்சத்தின் வேர்களும் கானகமொன்றிலிருந்து
எப்பொழுதோ அகற்றப்பட்டிருக்க
கொடும் நகரத்துக்குள் பூக்கள் உதிர்க்க
நிழல் சருகுகளையா தேடமுடியும்
மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது
அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
( நன்றி - யாத்ரா - இலங்கையிலிருந்து வெளிவரும் கவிதைகளுக்கான இதழில் பிரசுரமான கவிதை )
மேலுதிர்ந்த ஒற்றைப் பூவினை
ஏழை யாசகனொருவனின் மெலிந்த பாதமொன்று
மிதித்து நகர்கிறது
மிதிபடாவிடினும்
தாரோடு சேர்ந்து இதழ்கள் கறுக்க
இன்னும் பொசுங்கியிருக்கக்கூடும்
உதிர்த்த விருட்சத்துக்குத் தெரியவில்லை
பூவின் வலி
விருட்சத்தின் வேர்களும் கானகமொன்றிலிருந்து
எப்பொழுதோ அகற்றப்பட்டிருக்க
கொடும் நகரத்துக்குள் பூக்கள் உதிர்க்க
நிழல் சருகுகளையா தேடமுடியும்
மரத்திலிருந்து உதிர்ந்த
ஒற்றைக் காகத்தின் நிழல் மட்டும்
கறுப்பாகப் பறந்தவாறே
அடுத்த தெருவுக்குச் செல்கிறது
அத்தனையும் பார்த்தவாறு
கொடிய வெயில் அப்படியே இருக்கிறது
இப்பொழுது என்ன செய்தபடி இருக்கிறாயென
உன்னைக் கேட்கவிழையும் என்னையும் பார்த்தபடி
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
( நன்றி - யாத்ரா - இலங்கையிலிருந்து வெளிவரும் கவிதைகளுக்கான இதழில் பிரசுரமான கவிதை )
Friday, January 16, 2009
பொம்மை நேசம்
எனைச் சிலகாலம் உன் மனதிற்குத்
தத்தெடுத்திருந்தாய்
விழிகளை உருட்டி விழித்துக்
கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி
மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய்
தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு
என்றென்றும் நிலைத்திருக்க
பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி
உன் மனதில் நானிருந்தேன்
சில காலம் ஆயிற்று - எனக்கு
வேடிக்கை காட்டி நீ மகிழ்ந்து கிடப்பது
உனக்கே சலித்திருக்கக் கூடும்
மனம் முழுதும் வியாபித்துக் கிடந்த என்னை
சிறப்பேதுமற்ற நாளொன்றில்
விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்
இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
தத்தெடுத்திருந்தாய்
விழிகளை உருட்டி விழித்துக்
கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி
மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய்
தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு
என்றென்றும் நிலைத்திருக்க
பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி
உன் மனதில் நானிருந்தேன்
சில காலம் ஆயிற்று - எனக்கு
வேடிக்கை காட்டி நீ மகிழ்ந்து கிடப்பது
உனக்கே சலித்திருக்கக் கூடும்
மனம் முழுதும் வியாபித்துக் கிடந்த என்னை
சிறப்பேதுமற்ற நாளொன்றில்
விழி பறித்துக் கை முறித்து
உன் மாளிகையிலிருந்து உதறியெறிந்து
எனை வலிக்கச் செய்தாய்
இப்பொழுதும்
காக்கைக் கூடெனத் தெரிந்தே
கருங்குயில்கள் முட்டையிடுகின்றன
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, January 1, 2009
உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
காதல் வானத்திலேறி
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு நீ
சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்
சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது
உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை
என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை
அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு நீ
சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்
சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது
உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை
என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும் வண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை
அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, December 20, 2008
உன் பற்றிய கவிதைகள்
1.
மஞ்சள் பூக்களைப் பற்றிப் பேசியபடியும்
இலைகளிலிருந்து விழத்துடிக்கும்
மழைத்துளிகளைப் பாடியபடியும்
சாத்தான்களைத் தூதனுப்புமுன்
பாறாங்கல்லிதயத்திலிருந்து
நட்சத்திரமொன்றைத் தள்ளிவிட்டாய்
மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்
2.
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
மஞ்சள் பூக்களைப் பற்றிப் பேசியபடியும்
இலைகளிலிருந்து விழத்துடிக்கும்
மழைத்துளிகளைப் பாடியபடியும்
சாத்தான்களைத் தூதனுப்புமுன்
பாறாங்கல்லிதயத்திலிருந்து
நட்சத்திரமொன்றைத் தள்ளிவிட்டாய்
மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்
2.
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Wednesday, December 10, 2008
முடிவிலி
அடர்ந்த இருளின் கரங்களில்
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாச்
சில பிசாசுகளும் இருக்கக் கூடும்
நண்ப,
உயிர் பிரியும் வரை வலிகொடுத்த
குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை
ஒரு குறிப்பாக நீ
எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்
எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்
ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்
இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
( யுகமாயினி - டிசம்பர், 2008 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதை )
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாச்
சில பிசாசுகளும் இருக்கக் கூடும்
நண்ப,
உயிர் பிரியும் வரை வலிகொடுத்த
குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை
ஒரு குறிப்பாக நீ
எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்
எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்
ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்
இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
( யுகமாயினி - டிசம்பர், 2008 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதை )
Monday, December 1, 2008
நஞ்சூட்டியவள்
அவன் சோலைகள் பூத்த காலமொன்றில்
ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று
காடுலாவி மணம் பூசித்தென்றலும்
கால்தொட்டுக் கெஞ்சிற்று
அப்பொழுதில்
சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு
சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப்
பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான்
எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்
சூழப் பெருவெளி,ஆழப்பெருங்கடலின்னும்
நீலவானெனப் பார்க்கும் அத்தனையிலும்
அதனையே நினைந்திருந்தான்
இராப்பொழுது தோறும்
விழிசோரும் கணம் தோறும்
முப்பொழுதும் ஒரு துணையே
தப்பாமல் கனாக் கண்டான்
இணையெனச் சொல்லிக் கொண்டு
நீ வந்தாய்
ஏழு வானங்கள், ஏழு கடல்கள்,
ஏழு மலைகளை விடப் பாரிய அன்பை
வழிய வழிய இரு கைகளில் ஏந்தி
உன்னிடம் தந்து பின் பார்த்து நின்றான்
பாழ்நதிக்கரையோரம் இரவுகளில்
கருங்கூந்தல் விரித்து ஓலமாய்ச் சிரிக்கும்
ஒரு பிடாரிக்கு ஒப்பாக
நீ சிரித்தாய் - பின்
அவனது அன்பையும் பிரியங்களையும் அள்ளியெடுத்து
ஊருக்கெல்லாம் விசிறியடித்தாய்
ஒரு கவளம் உணவெடுத்து
அதில் சிறிது நஞ்சூட்டிக்
கதறக் கதற அவன் தொண்டையில்
திணித்திடவெனத்துடித்தாய்
இன்று இடையறாது வீழும்
அவனிரு விழித்துளிகளில் உயிர் பெற்று
உனது ஆனந்தங்கள் தழைக்கட்டும்
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
(அநங்கம் - மலேசியாவின் தீவிர இலக்கிய இதழில் நவம்பர் மாதம் வெளியான கவிதை )
ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று
காடுலாவி மணம் பூசித்தென்றலும்
கால்தொட்டுக் கெஞ்சிற்று
அப்பொழுதில்
சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு
சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப்
பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான்
எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்
சூழப் பெருவெளி,ஆழப்பெருங்கடலின்னும்
நீலவானெனப் பார்க்கும் அத்தனையிலும்
அதனையே நினைந்திருந்தான்
இராப்பொழுது தோறும்
விழிசோரும் கணம் தோறும்
முப்பொழுதும் ஒரு துணையே
தப்பாமல் கனாக் கண்டான்
இணையெனச் சொல்லிக் கொண்டு
நீ வந்தாய்
ஏழு வானங்கள், ஏழு கடல்கள்,
ஏழு மலைகளை விடப் பாரிய அன்பை
வழிய வழிய இரு கைகளில் ஏந்தி
உன்னிடம் தந்து பின் பார்த்து நின்றான்
பாழ்நதிக்கரையோரம் இரவுகளில்
கருங்கூந்தல் விரித்து ஓலமாய்ச் சிரிக்கும்
ஒரு பிடாரிக்கு ஒப்பாக
நீ சிரித்தாய் - பின்
அவனது அன்பையும் பிரியங்களையும் அள்ளியெடுத்து
ஊருக்கெல்லாம் விசிறியடித்தாய்
ஒரு கவளம் உணவெடுத்து
அதில் சிறிது நஞ்சூட்டிக்
கதறக் கதற அவன் தொண்டையில்
திணித்திடவெனத்துடித்தாய்
இன்று இடையறாது வீழும்
அவனிரு விழித்துளிகளில் உயிர் பெற்று
உனது ஆனந்தங்கள் தழைக்கட்டும்
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
(அநங்கம் - மலேசியாவின் தீவிர இலக்கிய இதழில் நவம்பர் மாதம் வெளியான கவிதை )
Tuesday, November 18, 2008
தொடர்பு எல்லைக்கும் அப்பால்...!
தனிமை
ஓர் ஆலமரத்தைப் போலப்
பெருநிழல் தந்துகொண்டிருந்தவேளை
நீயழைத்தாய்
கைபேசியின் கண்ணாடிச்சதுரம்
மின்னி மின்னி உன் பெயருரைத்தது
ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்
மிகுந்த ஆதூரமும் அன்பும் வழியும் குரலில்
எப்படியிருக்கிறாய் அன்பேயென்றாய்
உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும்
இந்தத் தனிமையும் பேய்ப் பொறுமையும்
நீ தந்து சென்றதுதானே
நான் பதிலுரைக்க
என்ன எஞ்சியிருக்கிறதின்னும்
இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன
எழுத்துக்களும் சோரும் காலம்,
உன் தொடர்பு எல்லைக்குமப்பால்
பாலைநிலம் தாண்டி- எனதான தேசம்
பாதங்களைச் சேர்க்குமென்
தூய இல்லத்தில் நானிருப்பேன்
அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
ஓர் ஆலமரத்தைப் போலப்
பெருநிழல் தந்துகொண்டிருந்தவேளை
நீயழைத்தாய்
கைபேசியின் கண்ணாடிச்சதுரம்
மின்னி மின்னி உன் பெயருரைத்தது
ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்
மிகுந்த ஆதூரமும் அன்பும் வழியும் குரலில்
எப்படியிருக்கிறாய் அன்பேயென்றாய்
உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும்
இந்தத் தனிமையும் பேய்ப் பொறுமையும்
நீ தந்து சென்றதுதானே
நான் பதிலுரைக்க
என்ன எஞ்சியிருக்கிறதின்னும்
இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன
எழுத்துக்களும் சோரும் காலம்,
உன் தொடர்பு எல்லைக்குமப்பால்
பாலைநிலம் தாண்டி- எனதான தேசம்
பாதங்களைச் சேர்க்குமென்
தூய இல்லத்தில் நானிருப்பேன்
அன்றுன் குளிர்காய்தலுக்கும்
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, November 1, 2008
கூழாங்கற் சினேகங்கள்
நீர்ச்சலனத்திற்கு ஏதுவான
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்
திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென
நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்
உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்
திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென
நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் - அன்றி
சிதறியும் போய்விடலாம்
உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்...!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Wednesday, October 15, 2008
மாய ஒளிசிதறும் திசை நோக்கிய பயணம்
அவளது பிரயாணத்தின் குறுக்கீடான
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை
வேட்டை நாயொன்றைப் போலவந்து
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது
சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று
கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று
இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க
அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
அகன்ற வாயிலைத் திறந்தபோது
சுவாசத்திலடித்தது சாத்தானின் வாடை
வேட்டை நாயொன்றைப் போலவந்து
சதைகள் கவ்வமுயன்ற பொழுது
வேடிக்கை காட்டித்
தப்பிக்கத் தெரியவில்லை அவளுக்கு
தூக்கிப் போட்டு இரை நோக்கவைக்க
இறைச்சித் துண்டுகளும் கைவசம் இல்லை
அவளுடல் பாகங்கள் குறித்தே
சாத்தானுக்குக் குறியிருந்தது
சூழச் சூழ வந்து அவளைத்
தொட்டணைத்துத் தன்
பற்தடங்களைப் பதிக்கமுயன்றகணம்
தேவதூதனொருவனின் மெல்லிறகுக் காற்று
இருவருக்குமிடையே ஓர் அணையை எழுப்பிற்று
மாயக்கரமொன்று அவளதிர்ந்த நெஞ்சை
ஆறுதல்படுத்தி விழிநீர் துடைத்திற்று
கீறல்கள் மட்டும் சுமந்து
எப்படியோ சாத்தானைக் கூண்டொன்றிலடைத்திட்டாள்
எம்பி எம்பியது அவளிடம் வர
முயற்சித்தபடியேயிருக்க
அவளது பயணம் தேவதூதனை நோக்கித்
திசைமாறிற்று
இன்று
தூரத்து ஒளியொன்று பார்வையில் இடறிட
நெடுஞ்சோலைகள் தாண்டிப்
பசும்வெளிகள் தாண்டி
வற்றாத அழகிய நீர்வீழ்ச்சிகள் தாண்டி
நிலவற்ற நடுநிசிகளில் கூட
அவனது மெல்லிறகுகள் கொண்ட
அருட்கரங்களைத் தேடியே
அவள் பாதங்கள் தொலைந்தபடியிருக்க
அணையெழுப்பிய மெல்லிறகுக் காற்றே
நீயறியாயோ வெந்துருகும் அவள் சுடுமூச்சை ?
விழிநீரழித்த மாயக்கரமே
நீயறியாயோ பிரவகிக்கும்
அவள் துயரங்களின் மூர்க்கத்தை ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Wednesday, October 1, 2008
பசித்தலையும் சுயம்
நான் பசியிலிருக்கிறேன்
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றா.
உனக்குத் தெரிந்த கல்நெஞ்சுக்காரன் நீ
எனது கூடாரங்களில் விளக்கெரித்தாய்
தீப்பற்றியது எனதெளிய இருப்பிடம்
சற்று நகர் - அனல் தெறிக்கும்
என் கண்களிலிருந்தும்
வாகை சூழ்ந்த பார்வை
வஞ்சனை சூழ்ந்த நெஞ்சு
நெஞ்சின் மேலொரு மழலை
யார் கண்டது
நாளை அதுவுமுனக்கு இரையாகலாம்
இப்பொழுதைப் போல அப்பொழுதும்
அப்பாவியாக நடித்தபடியிருப்பாய்
ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்
கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது
யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?
உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்
நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்
ஆமாம்
தனித்திருக்கிறேன்..!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றா.
உனக்குத் தெரிந்த கல்நெஞ்சுக்காரன் நீ
எனது கூடாரங்களில் விளக்கெரித்தாய்
தீப்பற்றியது எனதெளிய இருப்பிடம்
சற்று நகர் - அனல் தெறிக்கும்
என் கண்களிலிருந்தும்
வாகை சூழ்ந்த பார்வை
வஞ்சனை சூழ்ந்த நெஞ்சு
நெஞ்சின் மேலொரு மழலை
யார் கண்டது
நாளை அதுவுமுனக்கு இரையாகலாம்
இப்பொழுதைப் போல அப்பொழுதும்
அப்பாவியாக நடித்தபடியிருப்பாய்
ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாயுனக்கு
ஆயிரத்தெட்டுப் பெயர்கள்
அதிலொன்றைத்தான் - என்னை
உருகி உருகி அழைக்கவைத்தாய்
எனதுருக்கத்தில் எனதிரக்கத்தில்
கானகங்கள் பூத்திருக்கும்
வானம் சடாரெனப் பொழிந்திருக்கும்
தேசாந்திரிகளைத் தேடிப் பாசங்கள் நகர்ந்திருக்கும்
கபடங்களைச் சுற்றிச் சுற்றி இப்பொழுது
யாருக்கெல்லாம் பகிர்ந்தபடியிருக்கின்றாய் ?
உன் மிதியடியாக மட்டும்
என் பூக்களை விரித்திருக்கிறாய்
நான் பசியிலிருக்கிறேன்
பூக்களை இழந்த செடியின் மௌனத்தோடு
உனது அல்லது உன்னைப்பற்றிய
எந்தத் துதிபாடல்களும்
என் பசியினை ஆற்றாப் பொழுதொன்றில்
ஆமாம்
தனித்திருக்கிறேன்..!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, September 20, 2008
என் நேசத்துக்குரிய எதிரிக்கு...!

ஒரு கோதுக்குள்
என் மௌனத்தைக் கருக்கொண்டுள்ளேன்
அதனை ஓட்டையிட்டு
வார்த்தைகளை உறிஞ்சத் துடிக்கிறாய்
மூங்கிலைத் துளையிட்டாய்
புல்லாங்குழலாகினேன்
வேரினைக் குழிதோண்டிப் புதைத்தாய்
பெருவிருட்சமானேன்
கையிலேந்திய மழைத்துளிகளை விசிறியடித்தாய்
ஓடையாய் நதியாய்க் கடலாய்ப் பெருக்கெடுத்தேன்
இவ்வாறாக
எனக்கெதிரான உனதொவ்வொரு அசைவிற்கும்
விஸ்வரூபம் எடுத்துத் தொலைக்கிறேன்
அதிர்ச்சியில் அகலத்திறந்தவுன் வாயினை
முதலில் மூடுவாயாக !
இந்த வெற்றிகளை எனக்குச் சூடத் தந்தது
என் நேசத்துக்குரிய எதிரியான
நீயன்றி வேறெவர் ?
ஆனாலும் எனை என்ன செய்யச் சொல்கிறாய் ?
அமைதி தவழும் ஒரு மரணத்தைப்போல
அழகிய மௌனத்துடன் நானிருக்கிறேன்
பூச்சொறிவதாய்ச் சொல்லி
எதையெதையோ வாரியிறைக்கிறாய்
நான் தவம் கலைக்கவேண்டுமா என்ன ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Wednesday, September 10, 2008
ஒரு தற்கொலைக் குறிப்பு !
துரோகத்தைப் போர்த்தி வந்தது
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !
நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !
வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !
மறு நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !
செத்துப்போகிறேன் ;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !
இனிமேலும்,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
பொய்யானதொரு நேசம்,
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்
இருந்ததைக் கவனித்தபோதே
சுதாகரித்திருக்க வேண்டும் !
நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த
மடத்தனத்தை என்சொல்ல ?
நேசங்களின் மையப்புள்ளி
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,
இணையமும் வாழ்க்கையும்
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !
வார்த்தைகளால்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அன்பின் மாளிகையை உடைக்க
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்
பொத்திவந்தன ;
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்
பிளந்து உள்ளே எறிந்திட்டன !
மறு நெஞ்சம் சிரித்தவாறே
அதனைப்பார்த்து ரசித்திருந்தது
சிரித்த அதன் பற்களிடையே
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !
செத்துப்போகிறேன் ;
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..
உடலைப் புதைகுழி
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !
இனிமேலும்,
துரோகத்தைப் போர்த்திப்
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின்
இசையில் மயங்காமலும்,
அதன் சுவைகளில் உறையாமலும்
கவனமாக இருப்பீராக !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, September 1, 2008
கனவு முகங்களில் தொலையும் இரவு !
வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?
ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !
கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?
உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !
கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !
அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி ?
ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு ;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன் !
கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான் ;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய் ?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய் ?
உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய் !
கண்ணாடி விம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் ;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன் !
அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Posts (Atom)















